Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்கள் கைது

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2015 (04:06 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மூங்கில்பட்டு என்ற இடத்தில் செம்மரம் வெட்டியதாக கூறி 5 தமிழர்களை ஆந்திர சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
ஆந்திர மாநிலம் சந்திரகிரி அருகே மூங்கில்பட்டு என்னும் இடத்தில் 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டியதாக ஆந்திர சிறப்பு அதிரடிப்படைக்குத் தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து, சிறப்பு அதிரடிப்படை டிஐஜி காந்தா ராவ் தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செம்மரம் வெட்டிய கும்பல் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
இந்நிலையில், செம்மரம் வெட்டியதாக கூறி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 தமிழர்களை ஆந்திர சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments