Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. 2 ராணுவ வீரர்கள் காயம்..!

Siva
வியாழன், 19 டிசம்பர் 2024 (11:44 IST)
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று இரவு தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனை அடுத்து, பதிலுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையும் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments