Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: ஒடிசாவில் பரபரப்பு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (07:08 IST)
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரிலுள்ள தலைமைச் செயலகத்தின் முதலமைச்சர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 


ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் அம்மாநில தலைமைச் செயலகம் உள்ளது. அங்கு மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அலுவலகம் அமைந்துள்ளது.
 
இந்நிலையில், அந்த வளாகத்தில் திடீரென தீ விபத்து எற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அதை அணைத்தனர்.
 
இந்த தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் செட்டாப் பாக்ஸ் முதலிய சில பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments