Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டரும் இல்ல.. நர்ஸும் இல்ல.. அனாமத்தாக கிடந்த நோயாளிகள்! – கான்பூர் மருத்துவமனை மீது வழக்கு!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:20 IST)
உத்தர பிரதேசம் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கவனிக்க மருத்துவர், செவிலியர் இல்லாதது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாதது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் கான்பூரில் உள்ள நாராயணா மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவ துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மருத்துவமனை வசதிகள் சரியாக இல்லாததுடன், கொரோனா வார்டுகளில் நோயாளிகளை கவனிக்க மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோர் இல்லாததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகள் அலட்சியம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments