Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்சிமம் கடன் மோசடி தமிழகத்தில்... கணக்கு காட்டும் நிர்மலா சீதாராமன்!

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (10:13 IST)
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் பெற்று மோசடி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY) சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தக் கடன் திட்டம் அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 
 
கடந்த 2015 - 2016 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் மக்களவையில் முத்ரா கடன் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். 
நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாவது, முத்ரா கடன் திட்டம் துவங்கப்பட்டு கடந்த ஜூன் 21 ஆம் தேதி வரை ரூ.19 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,313 மோசடிகளும் நடந்துள்ளது. 
 
முத்ரா கடன் திட்டதில் வழங்கப்பட்ட கடனின் தமிழஜ்கத்தில் அதிகபட்சமாக 344 மோசடிகள் நடந்துள்ளன. இதை தொடர்ந்து சண்டிகரின் 275 மோசடிகளும், ஆந்திராவில் 241 மோசடிகளும் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments