Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: டெல்லியில் கெஜ்ரிவால் உருவ பொம்மை எரிப்பு

விவசாயி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: டெல்லியில் கெஜ்ரிவால் உருவ பொம்மை எரிப்பு
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (11:42 IST)
டெல்லியில் விவசாயி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கெஜ்ரிவால்  உருவ பொம்மையை எரித்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
 
நிலம் கையக மசோதாவுக்கு எதிராக நேற்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீடு முன்பு கெஜ்ரிவாலின் உருவப்படம் மற்றும் உருவ பொம்மையை எரித்து இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தில் ஈடுபட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil