Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டருக்கு மானியம் திட்டம் நீட்டிப்பு

Sinoj
வியாழன், 7 மார்ச் 2024 (21:14 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் 3 வது முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு பணியாற்றி வருகிறது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிபங்கீடு,  வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
 
இந்த நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியிலும் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் பிஸியாகியுள்ள நிலையில் இன்று,'சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டம் ஓரண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக 'மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதில், ''சமையல் எரிவாயு மானியத்தை அடுத்த ஓராண்டிற்கு நீட்டிக்க மத்திய  அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா போஜனா பயனாளிகளுக்கான எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும், இதற்காக ரூ.12 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக'' மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments