Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுழைவுத் தேர்வு ஊழல் ஒரு சாதாரண பிரச்சனை: சதானந்த கவுடா கருத்து

Webdunia
புதன், 8 ஜூலை 2015 (08:29 IST)
நுழைவுத் தேர்வு ஊழல் ஒரு சாதாரண பிரச்சனை என்று மத்திய சட்ட அமைச்சர்  சதானந்த கவுடா கூறியுள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா கலந்து கொண்டார்.
 
அப்போது செய்தியாளர்கள் நுழைவுத் தேர்வு ஊழல் பற்றி கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் பதில் அளித்த சதானந்த கவுடா, "இது சாதாரணமான ஒரு பிரச்சனை. இது போன்றவற்றுக்கு எல்லாம் பிரதமர் பதில் அளிக்க தேவையில்லை.
 
எங்களுடைய உள்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர்தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பார்கள். சாதாரணமான ஒவ்வொரு பிரச்சனைக்கும் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமானது அல்ல.
 
நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம். ஆனால் இது சாதாரண பிரச்சனையாகும். இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments