Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஜப்தி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (11:55 IST)
ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
 

 
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சந்திர பாபு நாயுடு அரசு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்குத் தொடர்ந்தது.
 
ஜெகன் மோகன் ரெட்டி மறைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனாவார். ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக பணம் பெற்றதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
 
இந்த வழக்கில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததற்கான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. ரூ. 404 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், ரூ. 344 கோடி அசையா சொத்துக்களும் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான பெங்களூரூ, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments