Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம்!

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (19:29 IST)
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கவுதம் காம்பீர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. கிழக்கு டெல்லி தொகுதியிலுள்ள ஜன்ங்புரா என்னும் பகுதியில், கடந்த 25ஆம் தேதி பாஜக சார்பில் தேர்தல் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு கவுதம் காம்பீர் உரிய முன் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது.
 
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், காம்பிர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறை, இது தொடர்பாக வழக்குப்ப்திவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments