கவுதம் காம்பீர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம்!

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (19:29 IST)
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கவுதம் காம்பீர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. கிழக்கு டெல்லி தொகுதியிலுள்ள ஜன்ங்புரா என்னும் பகுதியில், கடந்த 25ஆம் தேதி பாஜக சார்பில் தேர்தல் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு கவுதம் காம்பீர் உரிய முன் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது.
 
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், காம்பிர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறை, இது தொடர்பாக வழக்குப்ப்திவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments