Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிழ்ந்த 'சரக்கு' லாரி; கொண்டாடிய 'குடிமகன்கள்'

Webdunia
சனி, 1 நவம்பர் 2014 (16:21 IST)
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் பிரபலமான பீர் பாட்டில்கள் அடங்கிய லாரி திடீரென தலை குப்புற கவிழ்ந்ததில் பாட்டில்கள் உடைந்து நொறுங்கின.
 
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லி செல்லும் சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரிக்கு எதிரே சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திருப்பிய போது எதிர்பாராதவிதமாக சாலையிலிருந்து விலகி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட டிரைவர் மற்றும் அவரது சகோதரரையும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டனர்.
 

 
அதன் பிறகு, லாரி கவிழ்ந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் லாரி இருக்கும் பகுதிக்கு விரைந்த வந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த வாளி, குவளைகள், மற்றும்  இதரவற்றில் பீர் பாட்டில்களையும், சரக்குகளையும் எடுத்து கொண்டு சென்றனர். சிலர் அங்கேயே பீர் பாட்டில்களை குடிக்கவும் செய்தனர்.
 
விபத்து நடந்து நீண்ட நேரம் ஆகியும் காவல்துறையினர் வராததால் குடிமகன்களுக்கு மேலும் வசதியாக போய்விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் நேற்று மது விருந்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

Show comments