Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்: ஐசிஎம்ஆர்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (16:31 IST)
சீனாவின் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்
இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சீனாவின் Guangzhou wondo Biotech Zhuhai livzon ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவி தவறான முடிவை காண்பிப்பதாக ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் புகார் அளித்த நிலையில் இந்த ரேபிட் கிட் மூலம் சோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்தும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றை வாங்கிய நிறுவனத்திடமே திருப்பி அளித்துவிடவும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு பதிலாக RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments