Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட வேண்டாம்: பாக். கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (07:53 IST)
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 
பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக் கூடாது என்பதை வலியுறுத்தி பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங் மனோகரை முற்றுகையிட்டு சிவசேனா தொண்டர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால்  பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி நாடு திரும்பினார். சிவசேனாவின் இந்த செயலுக்கு அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட வேண்டாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஷித் லத்திஃப் கூறுகையில், "பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்தியாவுடன் எந்த கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் அணி விளையாடக்கூடாது" என்று தெரிவித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

Show comments