Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த இருவர் பலி

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (12:09 IST)
தங்களை துரத்திய நாயிடமிருந்து தப்பிப்பதற்காக, மூன்றாவது மாடியிலிருந்து குதித்த இரண்டு பேர் பரிதாபாக பலியான சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.


 

 
விசாகப்பட்டினத்தில் வசித்து வருபர் நரவா ராம்பாபு. அவர் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வளர்த்து வருகிறார்.
 
சம்பவத்தன்று, அந்த நாய் தீடிரென அவரை அடிக்க வந்துள்ளது. இதையடுத்து நாயை விட்டு விட்டு அவர் ஓடியுள்ளார். அங்கும் இங்கும் ஓடிய அந்த நாய், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு ஓடி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்களை துரத்தியுள்ளது. 
 
அதில், இருவர் மட்டும் ஒரு அறைக்குள் புகுந்து தப்பிவிட்டனர். மற்ற மூவரும், எங்கே தங்களை நாய் கடித்து விடுமோ என்று அஞ்சி, மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து உள்ளனர். அதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் பலி:60 ஆக அதிகரித்ததால் அதிர்ச்சி..!

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments