சிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்? - அதிர்ச்சி செய்தி

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (18:59 IST)
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் திலீப் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.


 

 
கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் கேட்டு அவர் விண்ணப்பித்த மனுவையும் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது. எனவே, தற்போது அவர் கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  அவரது காதில் வெர்டைகோ எனப்படும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் நிற்ககூட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. அவருக்கு சிறை மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளித்தும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாதுகாப்பு கருதி, அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையில் சிறை நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. 
 
அவரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. எனவே, அவரது உடல்நிலையை காரணம் காட்டி, அவரின் வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. 
 
அதே சமயம், அவரை சிறையிலிருந்து வெளியே அழைத்து வர நடத்தப்படும் நாடகம் இதுவென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

அடுத்த கட்டுரையில்