Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி அப்ரூவர் ஆகிறார்...

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (13:50 IST)
கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி அப்ரூவர் ஆகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
திலீப்பின் மனசாட்சியாகவும், வலது கரமாகவும் செயல்பட்டவர் அவரின் மேனேஜர் அப்புண்ணி. இவர் மூலமாகவே பல காரியங்களை செய்துள்ளார் திலீப். திலீப்பிடம் யாரும் பேச வேண்டுமானால் அப்புண்ணியைத்தான் தொடர்பு கொள்வார்கள்.
 
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் திலீப்போடு சேர்த்து இவரையும் கைது செய்த கேரள போலீசார், இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் “ திலீப் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்ட போது, என்னை அவர் தலைமறைவாக கூறினார். முக்கிய குற்றவாளி பல்சர் சுனிலோடு எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு” எனக் கூறியுள்ளார். மேலும், போலீசாருக்கு தேவையான பல முக்கிய தகவல்களை அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த வழக்கில் அவர் அப்ரூவர் ஆக போலீசாரிடம் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதன் மூலம் திலீப்பிற்கு எதிரான பல வலுவான ஆதரங்களை போலீசார் திரட்டி, நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள் எனவும் தெரிகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments