Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாருடைய மகளையும் அழைத்துக்கொண்டு நான் ஓடிவிடவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

யாருடைய மகளையும் அழைத்துக்கொண்டு நான் ஓடிவிடவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்
, திங்கள், 7 ஏப்ரல் 2014 (10:57 IST)
டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்  அரவிந்த் கெஜ்ரிவால், நான் ஓடிப்போய்விட்டதாக சிலர் கூறுகின்றனர். நான் இங்குதான் இருக்கிறேன், யாருடைய மகளையும் அழைத்துக்கொண்டு நான் ஓடிவிடவில்லை என தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ளார்.
 
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நான் ஓடிப்போய்விட்டதாக சிலர் கூறுகின்றனர். நான் இங்குதான் இருக்கிறேன், யாருடைய மகளையும் அழைத்துக்கொண்டு நான் ஓடிவிடவில்லை என தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ளார்.
 
மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சியை  குறிப்பிட்டு பேசிய கெஜ்ரிவால், நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆம் ஆத்மி  அரசு நிறைவேற்றியது போல் எந்த அரசியல் கட்சியும் குறுகிய காலத்தில் திட்டங்களை நிறைவேற்றியதில்லை என்று கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், நான் எனது கடைசி மூச்சு வரை ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக இங்கு இருக்கறேன் எனவும் தான் பாகிஸ்தானுக்கும் சென்றுவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 
 

Share this Story:

Follow Webdunia tamil