Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுக்குப் பின் பாஜகவில் ஐக்கியம் – டிசம்பரில் தேர்தல் !

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (12:17 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாஜகவில் ஐக்கியம் ஆக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இந்த உலகக்கோப்பையோடு சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஒய்வுப் பெறப்போவதாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் தோனி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவரை பாஜக வில் இணைக்க முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டில் இப்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி டிசம்பர் மாதத்தோடு முடிய இருக்கிறது. அதையடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரைக் களமிறக்க தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பஸ்வான் இதை உறுதிப்படுத்தும் விதமாக தோனியிடம் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments