Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயரவில்லை: அமைச்சர் விளக்கம்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (12:00 IST)
பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயரவில்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிக அளவில் உயர்ந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக காங்கிரஸ் எம்பி வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
 
பெட்ரோலிய பொருள்கள் மீது வரி விதிப்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம். கடந்த 300 நாட்களில் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை 7 முறையும் டீசல் விலை 21 முறையும் குறைந்துள்ளன.
 
மேலும் சுமார் 250 நாட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்துள்ளது. எனவே இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல் டீசல் விலை அதிக அளவில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டுவது தவறு என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments