Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கே விபூதி அடிக்க பாத்தியே! போலீஸுக்கே அபராதம் போட்ட போலி போலீஸ்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:25 IST)
டெல்லியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அபராதம் வசூலித்த போலி பெண் காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டராக தன்னை காட்டிக்கொண்டு போலீஸ் உடையில் திரிந்த பெண் ஒருவர் பொதுமுடக்க விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்து அபராத ரசீது அளித்துள்ளார்.

பயணிகளும் அவர் உண்மையான போலீஸ் என நம்பி அவரிடம் அபராதம் கட்டி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மப்டியில் வந்த இரு போலீசாரையும் நிறுத்தி பெண் போலீஸாக நடித்தவர் அபராதம் விதித்துள்ளார். அவரது போலி அபராத ரசீதை கண்டுகொண்ட போலீஸார் உடனடியாக அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர் போலீஸ் போல நடித்து பணம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments