Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூர் விஜயம்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (21:16 IST)
சர்க்கரை நோயாலும், தொடர் இருமலாலும் அவதிப்பட்டு வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக இன்று பெங்களூர் வந்தார்.
 
சிகிச்சை பெறுவதற்காக 10 நாட்கள் ஓய்வில் வந்துள்ள அவர் இன்று பெங்களூருவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
 
முன்னதாக இன்று மதியம் பெங்களூர் விமான நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்திறங்கிய கெஜ்ரிவால் நேராக சிகிச்சை பெற சென்றார். அங்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளிக்கிறது. கெஜ்ரிவால் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிண்டால் இயற்கை தீர்வு மையத்தின் தலைமை மருத்துவர் பாபினா நந்தகுமார் கூறியதாவது:-
 
“இரத்தில் கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய் உள்ளது. கடுமையான இருமலும் அவருக்கு இருக்கிறது. அவருக்கு ஈசிஜி எடுத்துள்ளோம். நாளை அவருக்கு உணவுக்கு முன் பின் இருகட்டமாக ரத்த பரிசோதனை செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
 
ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாள் ஓய்வில்  சிகிச்சைக்காக பெங்களூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Show comments