Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணாப் முகர்ஜியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (04:47 IST)
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென சந்தித்து பேசிய நிகழ்வு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும் டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே கடும் அரசியல் மோதல் நிலவி வருகிறது. 
 
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
 
இந்தச் சந்திப்பின் போது, டெல்லியில் நிலவும் தற்போதைய நிலவரம் குறித்து ஜனாதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.ஆனால்,

இந்த சந்திப்பின் போது, டெல்லி அரசு நிர்வாகம் சம்பந்தமாகவே இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. டெல்லி அரசியல் நிலவரம் குறித்து ஏதும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. 
 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments