Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.! ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி.!!

Senthil Velan
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (17:19 IST)
புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் வழங்கினார்.

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13ஆம் தேதி  திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கட்சியினர் மத்தியில் கெஜ்ரிவால் அறிவித்தார்.
 
டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அதிஷி டெல்லி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   
 
இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம், அதிஷி வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 


ALSO READ: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!


டெல்லி துணைநிலை ஆளுநரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஒரே நேரத்தில் சந்தித்து கடிதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments