Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிக்கப் பணம் தர மறுத்த மனைவியின் காதைக் கடித்து குதறிய கணவன்

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2014 (20:22 IST)
மஹாரஷ்ட்ரா தானே பகுதியில் மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்து குதறிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
தானே, பிவண்டி கோன்காவ் பகுதியை சேர்ந்தவர் பப்பு(வயது50). இவரது மனைவி ராக்மா(40). பப்புவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மனைவி ராக்மாவிடம் பணம்கேட்டு துன்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பப்பு வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்தார். அவரிடம் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும்படி ராக்மா கூறினார்.
 
அப்போது அவர் தனக்கு மது குடிக்க பணம் வேண்டும் என்று கூறி ராக்மாவிடம் தகராறு செய்தார். ஆனால் ராக்மா தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்து விட்டார்.
 
குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ராக்மா பணம் சேமித்து வைத்துள்ளதை தெரிந்துகொண்ட பப்பு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பண தர மறுத்து மனைவி தன்னிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பப்பு, ராக்மாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்தார். மேலும் அவர் ராக்மாவின் காதை கடித்து குதறினார்.
 
இதில் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்த ராக்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கல்யாணில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கோன்காவ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பப்புவை கைது செய்தனர்.

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

Show comments