Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பமான தீபாவளி சோகம்; பட்டாசு ஆலை விபத்து; 8 பேர் பலி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (11:47 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குமர்டுபி கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் அறையின் சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுவதால் பலியின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு அதிக அளவில் குடோனில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வந்தாலே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.
 
பட்டாசு ஆலையில் ஏற்படும் ஒவ்வொரு விபத்திலும் உயிர் சேதம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. சட்ட விரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளே இதற்கு காரணமாக இருந்து வருகிறது. இருந்தும் அரசு இதில் கவனம் செலுத்தாமல் மௌனம் காத்து வருகிறது.
 
Photo Courtesy: ANI

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments