Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்! – கேரள அமைச்சர் கெடுபிடி!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:31 IST)
சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள அமைச்சர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாகும் வரை பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடையில்லை என தெரிவித்திருந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது குறித்து தெரிவித்துள்ள சபரிமலை தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ”சபரிமலைக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு தர முடியாது. நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்” என கண்டிப்பாக சொல்லியிருக்கிறார்.

தீர்ப்பு வெளியாகும் வரை பெண்களை அனுமதிக்க கூடாது என்று சில அமைப்பினர் கேரள அரசை வலியுறுத்தி வரும் நிலையில் அமைச்சர் இப்படி சொல்லியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments