Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் பணியாற்றும் மாற்று மதத்தினருக்கு கட்டாய ஓய்வா? பரபரப்பு தகவல்..!

Mahendran
செவ்வாய், 19 நவம்பர் 2024 (11:15 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் மாற்று மதத்தினருக்கு கட்டாய ஓய்வு என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் இந்து மதத்தினரை தவிர, மாற்று மதத்தினரை விடுவிப்போம் என்றும், அவர்களுக்கான கட்டாய ஓய்வு அளிப்பது பற்றி விவாதிப்போம் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் வி. ஆர். நாயுடு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"கட்டாய ஓய்வுக்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நகராட்சி அல்லது பிறர் துறைக்கு மாற்ற பரிந்துரை செய்வோம்" என்றும், திருமலையில் மாற்று மத பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
மேலும், "திருப்பதி மலையில் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது" என்றும், விதிகளை மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் மாற்று மதத்தினரை கட்டாய ஓய்வில் செல்ல வலியுறுத்துவோம் என்று அறங்காவலர் குழு தலைவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments