Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்திரபிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்?

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (16:56 IST)
உத்திரபிரதேச தேர்தலில் அம்மாநில மக்களிடம் மிகவும் பிரபலமான பிரியங்கா காந்தியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துவிட்டது. பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.



விடுமுறையை கழித்த பின் இந்தியா திரும்ப உள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலை பெற்ற பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் பிறந்த ஷீலா, 1984ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் கன்னாவுஜ் தொகுதி  எம்பியாக வெற்றிபெற்றார். ஷீலாவின் கணவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அரசியலில் கவனம் செலுத்தி வந்த ஷீலா,  அம்மாநில முதல்வராக தொடர்ந்து 3 முறை பதவி வகித்துள்ளார்.  

இந்நிலையில்,  கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments