Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த ராஜினாமா: திணறும் குஜராத் காங்கிரஸ்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (16:02 IST)
குஜாராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
குஜராத்தில் 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், நேற்று 2 எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், இன்று மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.  வரும் ஜூன் 19 ஆம் மாநிலங்களவைத் தேர்தலை சந்திக்க உள்ள அக்கட்சி தலைமைக்கு இது புதிய சிக்கலை உருவாகியுள்ளது.
 
ஆம், அக்சய் பட்டேல், ஜிட்டுபாய் சவுத்திரி, பிரிஜேஷ் மிர்சா ஆகியோர் ராஜினாமா செய்தார். இதுவரை குஜராத்தில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments