Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா சுவராஜ் - வசுந்தரா ராஜே மீது பீகார் நீதி மன்றத்தில் வழக்கு

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2015 (02:52 IST)
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது, பாட்னா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

 
இந்திய அரசால் தேடுப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஐபிஎல் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஐபிஎல் கிரிக்கெட்டில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்தார் என்பது இவர் மீது உள்ள குற்றச்சாட்டு. இதனால், இந்திய அரசு, தன்னை கைது செய்யும் என கருதி, தற்போது லண்டனில் பதுங்கி வாழ்ந்து வருகின்றார்.
 
இந்நிலையில், பீகாரின் நண்பர்கள் என்ற அமைப்பு சார்பில், பாட்னா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான வினய் குமார் சிங் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், இந்த வழக்கு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments