Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி கடித்ததில் கோமாவில் இருந்த நோயாளி உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (13:28 IST)
அரசு மருத்துவமனையில் கோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை அரசு மருத்துவமனையில்  பர்மிந்தர் குப்தா(27) என்ற இளைஞர் விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். விபத்து ஏற்பட்டு மூளையில் ரத்தம் உறைந்து விட்டதால், கோமா நிலைக்கு சென்றார்.
 
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டார்.  மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான எலிகள் இருப்பதாக, குப்தாவின் தந்தை, மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கோமாவில் இருந்த குப்தாவின் கண்களை, எலிகள் கடித்துள்ளன. இதனால் அவரது கண்களில் அதிக ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த குப்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அலட்சியத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

AI தொழில்நுட்பத்துடன் அதிரடியாக வெளியானது Motorola Edge 50 Ultra!

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கோரி வழக்கு.. காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments