Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையிலும் சச்சினை பின்தொடர்ந்த சுதிர் குமார் சவுத்திரி

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (08:05 IST)
கோவையில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரது தீவிர ரசிகர் சுதிர் குமார் சவுத்திரியும் கலந்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


 

 
இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் பார்ப்பவர்களா நீங்கள்?. அப்போது உங்களுக்கு சுதிர் குமார் சவுத்திரியை நினைவிருக்கும். மொட்டை தலை, சட்டை அணியாத உடலில் இந்திய தேசியக் கொடியின் வர்ணம், கைகளில் மிகப் பெரிய தேசியக் கொடி, உடலில் சச்சினின் பெயர் ஆகியவையே சுதிரின் அடையாளம்.
 
சச்சின் விளையாடும் அனைத்து  போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு அவரை ஊக்குவிப்பவர் சுதிர் குமார் சவுத்திரி.
 
தனது அதிதீவிர ரசிகரான சுதிரை ஊக்கப்படுத்தும் விதமாக சச்சினின் சொந்த செலவிலே அவர் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டுகளையும் பெற்று வருகிறார்.
 
இந்நிலையில் கோவையில் நேற்று ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற கிரமோத்ஷவம் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்.


 

 
சச்சினின் வருகையையொட்டி கோவை கொடிசியா வளாகமே விழாக்கோலம் பூண்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சுதிர் குமார் சவுத்திரியும் கோவையில் ஆஜராகி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Show comments