Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்பெட்டாஸ் கூரையால் குழந்தைகள் பலி ! அதிர வைத்த ரிப்போர்ட்

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (17:35 IST)
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 150 குழந்தைகள் பலியாகினர். இது அம்மாநிலத்தில் மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெறும் லோக்சபாவிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை கொண்ட வீட்டில் வசித்தவர்கள்  என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பலியானதாக தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இந்தக் குழந்தைகள் இறந்ததற்காக காரணத்தை எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இதைப் பற்றி ஆய்வு செய்தனர்.
 
அதில், பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து தெரியவந்தது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதும், மார்ச் மாதம் முதல் நீர்ச்சத்தை சரிசெய்ய வேண்டிய  ஓஆர்எஸ் பவுடர் வழங்காதததும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் வளர்சிதை மாற்றக் கோளாறு சார்ந்த நோய்கள் மற்றும், குழந்தைகள் குறைந்த எடையில் இருந்த காரணத்தினால் குழந்தைகள் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
 
முதலில் பீகார் மாநிலத்தில் விளையும் லிச்சி பழத்தால்தான் குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அம்மாநில அரசின் சுகாதாரத்துறையின் குறைபாடுகளே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ள அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments