Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்பெட்டாஸ் கூரையால் குழந்தைகள் பலி ! அதிர வைத்த ரிப்போர்ட்

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (17:35 IST)
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 150 குழந்தைகள் பலியாகினர். இது அம்மாநிலத்தில் மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெறும் லோக்சபாவிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை கொண்ட வீட்டில் வசித்தவர்கள்  என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பலியானதாக தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இந்தக் குழந்தைகள் இறந்ததற்காக காரணத்தை எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இதைப் பற்றி ஆய்வு செய்தனர்.
 
அதில், பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து தெரியவந்தது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதும், மார்ச் மாதம் முதல் நீர்ச்சத்தை சரிசெய்ய வேண்டிய  ஓஆர்எஸ் பவுடர் வழங்காதததும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் வளர்சிதை மாற்றக் கோளாறு சார்ந்த நோய்கள் மற்றும், குழந்தைகள் குறைந்த எடையில் இருந்த காரணத்தினால் குழந்தைகள் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
 
முதலில் பீகார் மாநிலத்தில் விளையும் லிச்சி பழத்தால்தான் குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அம்மாநில அரசின் சுகாதாரத்துறையின் குறைபாடுகளே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ள அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments