10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி!

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (13:17 IST)
பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் விடுமுறையில் தங்கள் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில்  உணவகம் ஒன்று  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முயற்சி செய்துள்ளது.

சமீப காலமாக இந்திய அரசின் 10 ரூபாய் நாணயத்தை பேருந்துகள், பெட்டிக்கடைகள், ஓட்டல்களில் வியாபாரிகள், மக்கள் என பலரும் வாங்காத  நிலையில், 10 ரூபாய் நாணங்களை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  புதுச்சேரியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, 10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனால் 10 ரூபாய் நாணயத்துடன் சிக்கன் பிரியாணியை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் கடைமுன் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments