Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையுடன் சேர்ந்து கொசுவலைக்குள் படுத்துத் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (11:18 IST)
மகாராஷ்டிராவில் சிறுத்தைப்புலி குட்டி இன்று குழந்தையின் கொசுவலைக்குள் புகுந்து, குழந்தையோடு சேர்ந்து படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநில நாசிக் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில் மனிஷா ஜாதவ் என்பவர் தனது வீட்டில் தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.
 
பின் காலையில் எழுந்து பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த கொசுவலையில் தனது குழந்தைகளோடு, ஒரு சிறுத்தைப்புலி குட்டியும் தூங்கிக் கொண்டிருந்தது. பதற்றப்படாமல் அவர் பொறுமையாக தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலையில் இருந்து வெளியே மீட்டார்.
 
பின் இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து சிறுத்தைப்புலி குட்டியை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments