Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பெயரில் துணிகர மோசடி

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (01:20 IST)
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பெயரில் போலி சிபாரிசு கடிதம் கொடுத்து பணியில் சேர்ந்த நபர் மீது காவல்துறையில் புகார் கொடுக்க தனியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
 

 
உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத்தில் ஐ.எப்.டி.எம். என்ற தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த, மூன்று பேராசிரியர்கள், போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் உடனே, சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ஒருவரை, மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கையெழுத்திட்ட சிபாரிசு கடிதம், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளார்.
 
இந்த கடிதம் குறித்து, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி அலுவலகத்தில் விசாரித்த போது, அந்தக் கடிதம் போலியானது என தெரிய வந்தது. போலி சிபாரிசு கடிதம் கொடுத்த நபர் மீது,  ஐ.எப்.டி.எம். தனியார் பல்கலைக்கழகம் காவல்துறையில் புகார் செய்ய முடிவு செய்துள்ளது. 
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments