Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சிஏஏ சட்டத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு: போராட்டம் வெடிக்குமா?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (20:00 IST)
மீண்டும் சிஏஏ சட்டத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு: போராட்டம் வெடிக்குமா?
மீண்டும் சிஏஏ சட்டத்தை கையில் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தேசிய மக்கள் தொகை பதிவேடான என்.ஆர்.பி கணக்கெடுப்பை ஒவ்வொரு குடும்பத்திலும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்
 
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் சிஏஏ என்பது கருணையான முற்போக்கான ஒரு சட்டம் என்றும் இது இந்திய குடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இந்திய குடிமகனின் உரிமையை பாதிக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது
 
மேலும் வங்கதேசம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டுக்குள் வந்தவர்களுக்கு எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது 
 
ஆனால் இந்த கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிஏஏ கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments