Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைக்குள்ளான வாட்ஸ் ஆப் பாலிசி! – சம்மன் அனுப்பிய நாடாளுமன்ற நிலைக்குழு!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (13:40 IST)
வாட்ஸப்பின் புதிய கொள்கை மற்றும் நிபந்தனைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மக்கள் பலர் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செயலிகளுக்கு மாறி வருகின்றனர். வாட்ஸப் நிறுவனம் தாங்கள் எந்த தகவலையும் சேமிக்கவில்லை என்று விளக்கமும் அளித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸப்பின் புதிய கொள்கைகள் குறித்து ஜனவரி 21ல் விளக்கமளிக்க பேஸ்புக், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் ஆஜராக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments