சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை: காதலி ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பா?

Siva
வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:46 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்திதான் அவரது மரணத்திற்கு காரணம் என சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
 
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அதன் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.  நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த தீவிர விசாரணையின் முடிவில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என சிபிஐ அறிவித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இருப்பினும், சிபிஐயின் இந்த அறிக்கைக்கு சுஷாந்தின் தந்தை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சிபிஐயின் இந்த அறிவிப்பு, நான்கு ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments