Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.50 கோடி ஊழல் : கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் கைது

ரூ.50 கோடி ஊழல் : கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் கைது
, திங்கள், 4 ஜூலை 2016 (20:21 IST)
முறைகேடாக அனுமதி வழங்கி ரூ.50 கோடி வரை ஊழல் செய்ததாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
கடந்த டிசம்பர் மாதம், அரிவிந்த் கெஜ்ரிவால் அலுவலகம் உட்பட, தலைமை செயலக வளாகத்தில்  பல இடங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. அதற்கு கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில்,  கெஜ்ரிவாலின் முதன்மை செயலாலர் ராஜேந்திரகுமாரை  ஊழல் புகாரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவருக்கு உறுதுணையாக இருந்த துணை செயலாலர் தருண் ஷர்மா உட்பட மேலும் 4 அதிகாரிகளையும் சிபிஐ கைது செய்துள்ளது.
 
ஏற்கனவே மத்திய  அரசுக்கும் டெல்லி அரசுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வரும் வேளையில், 50 கோடி ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் டெல்லி அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
ராஜேந்திரகுமார் டெல்லி அரசின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். 2007 முதல் 2014ஆம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில், கோடிக்கணக்கான மதிப்புள்ள பணிகளை, அவர் முறைகேடாக என்டீவர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ரூ.50 கோடி வரை ஊழல் நடந்துள்ளது என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அமைச்சரவையில் மாற்றம் : புதியவர்களுக்கு வாய்ப்பு?