Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிய வகை டால்ஃபினை பிடித்து வறுவல்! கம்பி எண்ணும் மீனவர்!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (10:37 IST)
யமுனை ஆற்றில் வாழும் அரிய வகை டால்ஃபினை பிடித்து சமைத்து சாப்பிட்ட மீனவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



இமயமலையில் தொடங்கி பல வட மாநிலங்களை கடந்து செல்லும் கங்கை, யமுனை நதிகளில் பல உயிரினங்கள் வசித்து வருகின்றன. யமுனை நதியில் நன்னீர் முதலை, நீர்நாய், டால்ஃபின் உள்ளிட்ட பல அரியவகை அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவற்றை பிடிப்பதோ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அரியவகை நன்னீர் டால்ஃபின் அவரது வலையில் சிக்கியுள்ளது. அதை விடுவிக்காமல் அவர் அதை எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டுள்ளார். அந்த டால்ஃபினை எடுத்து செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மீனவரை கைது செய்துள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments