Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் தாக்குதல்: தீவிரவாதிகளில் ஒருவர் பிடிபட்டார்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2015 (18:53 IST)
காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இன்று காலை 05-08-16 (புதன்கிழமை) தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உத்தம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் மரணம் அடைந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
 

 
இதற்கு பதிலடி கொடுத்து, பாதுகாப்பு வீரர்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் அருகில் இருந்த பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து அங்கிருந்த 3 பேரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார். அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து, தொடர்ந்து நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments