Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழமை வாய்ந்த எச்எம்டி கடிகார கம்பெனி மூடல்: அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
புதன், 6 ஜனவரி 2016 (20:44 IST)
நஷ்டத்தில் இயங்கும் எச்எம்டி கடிகார கம்பெனி உள்ளிட்ட 3 ஆலைகளை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.


 

 
 
டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நஷ்டத்தில் இயங்கும் எச்எம்டி உள்ளிட்ட 3 ஆலைகளை ஒப்புதல் தரப்பட்டது. 
 
அந்த ஆலைகளை மூடும் போது பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு தரவும் இதற்காக 427 கோடி ரூபாய் ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. முத்ரா எனப்படும் பிரதமரின் சிறுதொழில் வளர்ச்சி மறுநிதியுதவி நிறுவனத்தை வங்கியாக மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதோடு ஒரு லட்சம் கோடி ரூபாயில் கடன் உத்தரவாத நிதித் தொகுப்பை ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது. மேலும், இந்தியா - பஹ்ரைன் நாடுகள் இடையில் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

Show comments