இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Siva
வெள்ளி, 9 மே 2025 (08:41 IST)
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது.
 
பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இந்திய எல்லையை நோக்கி பறந்தாலும், இந்தியாவின் உயர் பாதுகாப்பு முறை அவற்றை வானிலேயே தடுத்து அழித்தது.
 
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. சில இடங்களில் இரு பக்க ராணுவங்களும் தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
 
இந்த சூழ்நிலையில், மே 9 முதல் 14 வரை நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் (ICAI) அறிவித்துள்ளது.
 
இது குறித்து இணைச் செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி கூறியதாவது:
"நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, சிஏ தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் தொடர்ந்து தகவல்களை பார்வையிடலாம்" என்றார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments