Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கால்வாயில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (17:23 IST)
தெலங்கானாவில், பேருந்து கால்வாயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
 


 


தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு அதிகாலை 30 பயணிகளுடன் பேருந்து சென்றது. கம்மம் மாவட்டம் குசுமான்ஜி மந்தல் என்ற இடத்தில் உள்ள பாலத்தில் பேருந்து வேகமாக சென்றுள்ளது. 
 
அப்போது பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 2 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
 
மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். ஒட்டுனர் அலட்சியத்தாலேயே விபத்து நேரிட்டதாக விபத்தில் இருந்து உயிர்தப்பிய பயணிகள் கூறியுள்ளனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. 

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments