Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது சிங்கப்பூர், புருனே பயணம்.. டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி..!

Siva
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:39 IST)
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே நாட்டிற்கு சென்ற நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில் அங்கு அந்நாட்டு மன்னரை சந்தித்து முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இரு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டு இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதன் பின் சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி ,சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் அவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். திருவள்ளுவர் பெயரில் முதல் சர்வதேச கலாச்சார மையம் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இரண்டு நாடுகளிலும் வெற்றிகரமாக பயணத்தை முடித்த பிரதமர் மோடி சற்று முன் டெல்லி திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments