Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2015 (13:50 IST)
பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா நகரத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர், 10 க்கும் மேற்பம்டோர் படுகாயமடைந்துள்ளனர். 
 
நண்பகல் 12 மணியளவில் ஒரு பெண்  சக்தி வாய்ந்த வெடிகுண்டோடு நீதிமன்றத்திற்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தத் தாக்குதலில் அந்தப்பெண் சம்பவ இடத்தில் பலியானதாகவும், மேலும் நீதிமன்றத்தினுள் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவரும் பலியானதாகவும் மேலும் 10 க்கும் மேற்பம்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments