Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் மாநிலத்தில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு

Webdunia
திங்கள், 26 ஜனவரி 2015 (11:35 IST)
66 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாம் மாநிலத்தில் டின்சுக்யா மாவட்டத்தில் டிக்போயி நகரில் தொடர்ச்சியாக 2 குண்டுகள் வெடித்துள்ளன.
 
ரயில் தண்டவாளம் அருகே உள்ள குப்பை கிடங்கில் புதைத்து வைத்திருந்த குண்டு முதலில் வெடித்தது. இதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து குப்பை கிடங்கின் அடியில் உள்ள சாக்கடையில் மற்றொரு குண்டு வெடித்தது.
 
இந்த இரண்டு 2 குண்டுகளும் குறைந்த சக்தி திறன் கொண்டவையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவை நாட்டு வெடிகுண்டுகளாகும் என்று தகவல்கள் தெரிவிக்கன்றன. எனவே, இந்த சம்பவம் பெரிய அளவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், குடியரசுத்தின விழாவை சீர் குலைக்கத் திட்டமா? என்னும் கோணத்தில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments