Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4,147 கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளியீடு - மத்திய அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:35 IST)
வெளிநாட்டில் உள்ள சட்டவிரோத சொத்துகளின் மதிப்பு ரூ.4 ஆயிரத்து 147 கோடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியுள்ளார்.
 

 
வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவலை அரசிடம் அளிக்க 90 நாட்கள் அவகாசத்தை மத்திய அரசு வழங்கி இருந்தது. அதன்படி அரசாங்கம் சேகரித்துள்ள தொகை ரூ.4,147 கோடி என வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியுள்ளார்.
 
கருப்புப் பணம் வைத்திருப்பது குறித்து கிடைத்துள்ள பிரமாண பத்திரங்களின் மொத்த எண்ணிக்கை 638 என்றும், வெளிநாட்டில் உள்ள சட்டவிரோத சொத்துகளின் மதிப்பு ரூ.4 ஆயிரத்து 147 கோடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அதியா கூறியுள்ளார்.
 
சட்டவிரோத வெளிநாட்டு பணம் வைத்திருப்போர் அது குறித்து தகவல் வெளியிட்ட பின் ரூ.3,770 கோடி கருப்பு பணம் பெறப்பட்டுள்ளது என கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அரசு அறிவித்தது. இது பெறப்பட்ட பணத்தின் முதற்கட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
சட்டவிரோத வெளிநாட்டு சொத்துகளை வைத்திருப்போர் அது குறித்து அரசிடம் அறிவிப்பதற்கு 90 நாள் வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் இந்நடைமுறை முடிவுக்கு வந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments