Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (09:52 IST)
பீகாரில் பாஜக பிரமுகர் ஒருவர் பள்ளி மாணவர்கள் மீது தனது காரை ஏற்றிக் கொன்றதால், அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில்  கடந்த 24-ம் தேதி பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார், தாறுமாறாக ஓடி பள்ளிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
 
காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments