Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (09:52 IST)
பீகாரில் பாஜக பிரமுகர் ஒருவர் பள்ளி மாணவர்கள் மீது தனது காரை ஏற்றிக் கொன்றதால், அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில்  கடந்த 24-ம் தேதி பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார், தாறுமாறாக ஓடி பள்ளிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
 
காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments